இடுகைகள்

பிப்ரவரி 9, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெல்லை சு. முத்துவின் பாரதி காவியம் – பாக்களால் வரைந்த ஒரு வரலாறு (மதிப்புரை)

படம்
  நெல்லை சு. முத்து  (நன்றி dinamani.com) தமிழ் மரபில் பாரதிக்கென்று தனித்த இடம் என்றுமுண்டு. அதற்குக் காரணம் அவர் படைத்த படைப்புகள் மட்டுமல்ல அவர் தன் வாழ்க்கையை வாழ்ந்த விதத்தினாலும் தான். தமிழ் வெகுசனப் பரப்பில் பாரதிக்கென்று இன்றைக்கு உருவாகியிருக்கும் அடையாளம் கடந்த ஒரு நூற்றாண்டாகப் பல்வேறு வழிகளில் , பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களின் வாயிலாக , பல்வேறு கருத்தியல் வாதிகளின் கருத்து மோதல்களால் உருவாகி வந்திருக்கிறது. இன்னும் எழுதித் தீராத உன்னத வாழ்வாக பாரதியின் வாழ்வு இன்றும் படைப்பாளிகளுக்கு உள்ளது என்பதற்குச் 2016 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கின்ற ‘பாரதி காவியம்’ என்ற நூல் சான்றாகும். இக்கவிதை நூலின் ஆசிரியர் அறிவியல் விஞ்ஞானியும் கவிஞருமான நெல்லை சு. முத்து ஆவார். இந்திய விண்வெளித்துறையில் முதனிலை விஞ்ஞானியாகப் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றுள்ள இவர் 140க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். பாரதி எனும் ஆவணம்           எங்கள் தலைமுறை வெறுமனே பாரதியாரின் ஒன்றிரண்டு கவிதை வரிகளைப் படித்து விட்டுப் போகிற போக்கில் தம் வசதிக்க...

கா. சிவத்தம்பியின் தமிழிலக்கிய வரலாற்றின் பிரச்சினை மையங்கள் - சில அவதானிப்புகள் (மதிப்புரை)

படம்
            கா.சிவத்தம்பி (நன்றி  vanakkamlondon.com )        கார்த்திகேசு சிவத்தம்பி (1932 - 2011) தமிழின் முன்னோடி ஆய்வாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். இவர் தம்முடைய ஆய்வுக்களங்களாக த் தேர்ந்து கொண்ட சமூக வரலாறு, வெகுசனப்பண்பாடு, இலக்கியம் , இலக்கணம் முதலியவற்றில் மார்க்சிய அணுகுமுறையைக் கையாண்டு தமிழ் ஆய்வுலகில் தனக்குரிய வலுவான இடத்தைப் பெற்றிருக்கிறார். தமிழ்மொழி போன்ற பழமையான ஒரு மொழியின் பெருமிதத்தில் மூழ்காமல் முற்றிலும் அறிவியல் பார்வையோடு செய்யப்படும் ஆய்வுகளை ஊக்கப்படுத்துவதையும் அதன் வரலாற்றுத் தேவையை நம்மவர்களுக்கு உணர்த்துவதையுமே தன்னுடைய நோக்கமாகக் கொண்டு தம் ஆய்வுகளை மேற்கொண்டவர். இந்நூல் உருப்பெற்ற முறை என்பது இன்று தமிழ் ஆய்வுலகில் ஒரு முன்னோடி செயல்வடிவமாகும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் அப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம் அவர்களால் அங்கு ஆய்வுப்பணி மேற்கொள்ள அழைக்கப்பட்ட முதலிரண்டு சிறப்பாய்வாளர்களுள் பேராசிரியர் சிவத்தம்பியும் ஒருவர். அங்கு ஆய்வுப்பணி ம...

சமூக வரலாற்று நாவல்களும் பின்காலனியக் கருத்தியல்களும் (கட்டுரை)

படம்
                                                                 I வரலாற்று நாவல்கள் என்றவுடன் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டவை என்கிற பொதுப் புரிதல் நமக்கு உடனே ஏற்பட்டாலும்கூட, உண்மையில் அவை வரலாற்றை அணுகுவதில் தனித்தனி வகைமை வேறுபாடுகளுடனே தான் இலக்கிய வரலாற்றில் தொழிற்பட்டு வந்திருக்கின்றன. அவ்வண்ணமே இலக்கியத் திறனாய்வாளர்களால் அணுகவும் பட்டிருக்கின்றன. இலக்கியம் என்பது காலத்தின் உற்பத்தி என்பதுடன் அது காலத்தையும் உற்பவிக்கின்றது என்கிற சிவத்தம்பியின் (2008, ப. 15) கருதுகோள் மற்ற படைப்பிலக்கியங்களை விட வரலாற்று நாவல்களுக்கு சிறப்பாகவே பொருந்தக் கூடியது. ஏனெனில், இவ்வரலாற்று நாவல்கள் காலத்தால் உற்பத்தி செய்யப்படுகிற அதேநேரத்தில் காலத்தையும் உற்பவிக்கின்ற செயல்பாட்டையும் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட...