இடுகைகள்

தென்புலத்தார் தெய்வமுணர் படலம் (சிறுகதை)

படம்
                                                                                                            அ அம்மா இறந்த பிறகான இந்த ஒரு வருடத்தில் நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. எந்தவிதமான நெருக்கடிகளிலும் என்னைத் தடம் புரளாமல் வழிநடத்திவந்த என் அப்பா அம்மாவின் இறப்பிற்குப் பிறகு தடம் புரண்டு போனார். அந்த நாட்களில் என்னை விட்டு அவர் வெகுதூரம் போய்விட்டது போலிருந்தது. ஐந்து வருடத்திற்கு முன்பு வரைக்கும் எனக்கு அப்பாவாக மட்டும் இல்லாமல் நல்ல நண்பரைப் போலவும் இருந்தவர்தான். படிப்பறிவு இல்லாமல் பட்டறிவைக் கொண்டே தனக்குண்டான மரியாதையையும் மதிப்பையும் எங்கள் சின்ன கிராமத்தில் தேடிக்கொண்டவர். அவருக்கிருந்த விசாலமான பார்வையினாலேயே என்னைத் தன்னியல...

காலவெளிப் பயணம் செய்யும் எம்.ஜி.சுரேஷின் நாவல் “அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்”

படம்
       எழுத்தாளர் எம் . ஜி . சுரேஷ் (1953-2017) எழுதி 2000 ஆம் ஆண்டு புதுப்புனல் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த நாவல் “ அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தே னீ ரும் ”. இந்த நாவலின் பழைய பிரதியை பழையப் புத்தகக்கடையில் வாங்கி வைத்துப் பல வருடங்கள் ஆயிற்று. வாசிக்காமலே கிடந்தது. இப்போதுதான் வாசிக்க முடிந்தது. இ து பின்நவீன எழுத்து முறையில் எழுதப்பட்டிருக்கிற நாவல். நாவல் என்கிற பிரதியில் பல பிரதிகள் ஊடாடி கதையை நேர்கோடற்றத் த ன் மையில் சொல்வதை ப் பொதுவாகப் பின்நவீன எழுத்து என்று குறி ப்பிடுவார்கள். தமிழ்ச் சூழலில் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் அமைப்பியம் , பின்அமைப்பியம் , பின்நவீனத்துவம் முதலான கோட்பாடுகளைக் குறித்த விவாதங்கள்   மிகத் தீவிரமாக நடைபெற்றன . இந்த விவாதத்தி ன் தொடர்ச்சியாக இலக்கியத்தில் இந்தக் கோட்பாடுகளின் தாக்கத் தால் பல சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வா றான நாவல்களில் ஒன்றுதான் எம் . ஜி . சுரேஷின் அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தே னீ ரும் . இந்த நாவல் வெளிவந்ததற்குப் பிறகான இந்த 25 ஆண்டு கால தமிழ் இலக்கியச் சூழலில் பின்நவீன எழுத்து ...

எழுத்தாளர் அராத்துவின் “பவர் பேங்க்” நாவல் - வாசிப்புக் குறிப்பு

படம்
  எழுத்தாளர் அராத்து Notion Press செயலியல் தொடர்கதையாக எழுதிய பவர் பேங்க் நாவலை வாசித்து முடித்தேன். இக்கதையில் வரும் நான்கு முக்கியமான பாத்திரங்கள் ஆற்றல், அமண்டா, அம்ருதா, கடம்பவேல். இதில் ஆற்றல் என்கிற பாத்திரம்தான் தலைமைப் பாத்திரம்.  ஆற்றல் ப ணக்காரப் பின்புலம் கொண்ட ஒரு தமிழ் எழுத்தாளன். தன்னுடைய நாவல் ஒன்றை எழுதுவதற்காக இமயமலை அடிவாரத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து தன்னுடைய மோட்டார் பைக்கில் பயணம் மேற்கொள்கிறான். அப்படிச் செல்லும்பொழுது அவன் எதிர்கொள்கிற சம்பவங்களே நாவலின் கதைக்கரு . ஆற்றல் சராசரி மனித வாழ்வின் ஆசாபாசங்களுடன் இருக்க விரும்பாதவன் ; எதற்கும் கட்டுப்படாதவன் ; சு தந்திரமான மனப்போக்குடன் இருப்பவன் . அதனாலேயே திருமணம் என்ற வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டு வாழ்க்கையைக் குறுக்கிக்கொள்ள வேண்டாம் என்கிற எண்ணம் கொண்டவன் . செக்ஸுக்காக ப் பெண்களுடன் பழகினாலும் அதில் மிகுந்த நாகரிகமாக இருந்து அவர்களைக் கண்ணியத்துடன் கையாள்கிறான்.   இந்த நாவலில் அராத்துவின் படைப்பாக்க ச் சிந்தனையை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். நம்முடைய இந்திய, தமிழ் மனம் நவீன சிந்தனையை ,...

நெல்லை சு. முத்துவின் பாரதி காவியம் – பாக்களால் வரைந்த ஒரு வரலாறு (மதிப்புரை)

படம்
  நெல்லை சு. முத்து  (நன்றி dinamani.com) தமிழ் மரபில் பாரதிக்கென்று தனித்த இடம் என்றுமுண்டு. அதற்குக் காரணம் அவர் படைத்த படைப்புகள் மட்டுமல்ல அவர் தன் வாழ்க்கையை வாழ்ந்த விதத்தினாலும் தான். தமிழ் வெகுசனப் பரப்பில் பாரதிக்கென்று இன்றைக்கு உருவாகியிருக்கும் அடையாளம் கடந்த ஒரு நூற்றாண்டாகப் பல்வேறு வழிகளில் , பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களின் வாயிலாக , பல்வேறு கருத்தியல் வாதிகளின் கருத்து மோதல்களால் உருவாகி வந்திருக்கிறது. இன்னும் எழுதித் தீராத உன்னத வாழ்வாக பாரதியின் வாழ்வு இன்றும் படைப்பாளிகளுக்கு உள்ளது என்பதற்குச் 2016 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கின்ற ‘பாரதி காவியம்’ என்ற நூல் சான்றாகும். இக்கவிதை நூலின் ஆசிரியர் அறிவியல் விஞ்ஞானியும் கவிஞருமான நெல்லை சு. முத்து ஆவார். இந்திய விண்வெளித்துறையில் முதனிலை விஞ்ஞானியாகப் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றுள்ள இவர் 140க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். பாரதி எனும் ஆவணம்           எங்கள் தலைமுறை வெறுமனே பாரதியாரின் ஒன்றிரண்டு கவிதை வரிகளைப் படித்து விட்டுப் போகிற போக்கில் தம் வசதிக்க...

கா. சிவத்தம்பியின் தமிழிலக்கிய வரலாற்றின் பிரச்சினை மையங்கள் - சில அவதானிப்புகள் (மதிப்புரை)

படம்
            கா.சிவத்தம்பி (நன்றி  vanakkamlondon.com )        கார்த்திகேசு சிவத்தம்பி (1932 - 2011) தமிழின் முன்னோடி ஆய்வாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். இவர் தம்முடைய ஆய்வுக்களங்களாக த் தேர்ந்து கொண்ட சமூக வரலாறு, வெகுசனப்பண்பாடு, இலக்கியம் , இலக்கணம் முதலியவற்றில் மார்க்சிய அணுகுமுறையைக் கையாண்டு தமிழ் ஆய்வுலகில் தனக்குரிய வலுவான இடத்தைப் பெற்றிருக்கிறார். தமிழ்மொழி போன்ற பழமையான ஒரு மொழியின் பெருமிதத்தில் மூழ்காமல் முற்றிலும் அறிவியல் பார்வையோடு செய்யப்படும் ஆய்வுகளை ஊக்கப்படுத்துவதையும் அதன் வரலாற்றுத் தேவையை நம்மவர்களுக்கு உணர்த்துவதையுமே தன்னுடைய நோக்கமாகக் கொண்டு தம் ஆய்வுகளை மேற்கொண்டவர். இந்நூல் உருப்பெற்ற முறை என்பது இன்று தமிழ் ஆய்வுலகில் ஒரு முன்னோடி செயல்வடிவமாகும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் அப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம் அவர்களால் அங்கு ஆய்வுப்பணி மேற்கொள்ள அழைக்கப்பட்ட முதலிரண்டு சிறப்பாய்வாளர்களுள் பேராசிரியர் சிவத்தம்பியும் ஒருவர். அங்கு ஆய்வுப்பணி ம...